
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், காவிரி கரையோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடிப்பதால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், கடந்த ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டிநிரம்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்