
மதுரை: மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை தமிழில் மொழி பெயர்க்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் சூட்டப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் போது தமிழக அரசின் விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் திட்டத்தின் பெயரை இந்தி மொழில் இருப்பது அப்படியே தமிழில் குறிப்பிடப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்