
பழநியில் அக்.25-ம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை.
அக்.25-ம் தேதி மாலை 5.21 மணி முதல் 6.23 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உச்சி கால பூஜை காலை 11.30 மணிக்கு தொடங்கி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் முடித்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்