
சென்னை: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு அரசு செலவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் 40 சதவீதம் மானியம் பெறும் திட்டத்தில் விவசாயிகள் இணையுமாறும் வேண்டுகோள் விடுத் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளையும் ஒருங்கே செயல்படுத்தும் வகையில், கடந்த நிதி ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இதன்கீழ், கிராம பஞ்சாயத்துகளில் 10-15 ஏக்கர் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, இத்தொகுப்பில் உள்ளவிவசாயிகளை குழுவாக ஒருங்கிணைத்து பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 980 தரிசு நிலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டு, 705 தொகுப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்