
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சித்தலிங்க மடம் கிராமத்தில் நேற்று நடைபெற இருந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக் கணித்து கடையடைப்பு நடத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்