
சென்னை: சென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய தாமதம் ஆவது குறித்து என்று தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், வட சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், "சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்கள் 7 செ.மீ., நீரை உள்வாங்கும் திறன் கொண்டது. அதைவிட அதிகளவு செ.மீ. மழை பெய்தால், மழைநீர் வடிய இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் மழைநீர் சீராக செல்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்