
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து புதுச்சேரி பொது சுகாதார செவிலியர் அதிகாரி வி.சரஸ்வதி, 2021-ம்ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினை பெற்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று, சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு விருதளிக்கும் நிகழ்ச்சிநடந்தது. இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு,2021-ம் ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினைநாடு முழுவதும் சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு வழங்கினார்.
இதில், புதுச்சேரி சுகாதாரத் துறையின் துணை இயக்குநரக அலுவலகத்தில் பொது சுகாதார செவிலியராகப் பணிபுரியும் வி.சரஸ்வதி, 2021-ம் ஆண்டுக்கான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைப் பெற்றார். இவர், கடந்த 1987-ல் அரசுசெவிலியராக தனது பணியைத்தொடங்கினார். 11 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஐசியூ, டயாலிசிஸ் யூனிட்டில் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகள் நர்சிங் கல்லூரியில் பணிபுரிந்த இவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக மாஹே உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்