
கோவை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உள்ளது போல் சிலர் மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர் என தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட முதல்வர் முடிவெடுத்துள்ளார். அதை நிறைவேற்ற திறன் கொண்டவர்கள் அதிகம் தேவைப்படுவர். இன்றைக்கு வணிகவியல் பிரிவு மாணவர்கள் தொழில்துறையில் நிறைய பங்களிக்க வேண்டிய தேவை உள்ளது. வரும் காலங்களில் தொழில்துறையில், நிறைய சிஏ படித்தவர்கள் தேவை இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்