
புதுச்சேரி: டெல்லி நேரு யுவகேந்திரா சார்பில் காலாப்பட்டு, புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவை மையத்தில் நடைபெற்ற “அரசு சாரா அமைப்பு மேலாண்மை-ஆதாரம் மேம்பாடு” குறித்த மாநில அளவிலான கருத்தரங்கினை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘புதுச்சேரியில் கடல்சார் உயிரினங்கள் காட்சியகம் அமைக்கவும், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்து வந்து பார்க்கும் அளவுக்கு கடற்கரை மேலாண்மை செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது. புதுச்சேரியில் ரூ.50 முதல் 60 கோடி வரை கடல் மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அப்படி வரும்போது புதுச்சேரியில் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு மீனவர்கள் இன்னும் அதிக பாதுகாப்பாக இருப்பார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்