
திண்டுக்கல்: தமிழகத்தில் முதன்முறையாக காவல் நிலையங்களில் புகார்தாரர்களை மென்மையாக அணுகி, அவர்களின் பிரச்னைகளை துரிதமாக தீர்க்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உருவாக்கினார்.
‘கிரேட்’ என்ற இத்திட்டம் மூலம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், நியமிக்கப்படும் வரவேற்பாளர்கள் மூலம் புகார்தாரர்களின் மனுக்களை பெற்று, உடனுக்குடன் ஆன்லைனில் பதிவிடுவது, உரிய அதிகாரிகளால் பிரச்னைக்கு தீர்வு காணுதல், தேவையின்றி காவல் நிலைய பகுதியில் மக்கள் கூடுவது போன்ற வீண் பிரச்னைகளை தவிர்க்கும் விதமான செயல்பாடுகளை சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்