
சென்னை: இந்தாண்டின் இறுதி சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. பருவமழை குறுக்கீடு காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான பகுதிகளில் கிரகணத்தைக் காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திரனை முழுமையாக பூமி மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் எனவும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் எனவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்