
திருவள்ளூர்: இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று நேற்று முன்தினம் நடந்த சென்னை, அம்பத்தூர் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார். சென்னை, அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
குறுகிய இடத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த நீதிமன்ற வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். ஆகவே, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையின் விளைவாக, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில், அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, ரூ.12.39 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்