
சென்னை: தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,339 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. வரும்நவ.15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும்போது, தமிழக விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலின் 2022-23-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மாநில அரசின் காப்பீட்டுக் கட்டணமானியமாக ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்