
சென்னை: சென்னை அசோக் நகர் அருகே ரூ.39 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தலைமை அலுவலகம் கட்டும் பணிகள் நிறைவு பெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மத்தியஅரசின், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவைமையம் மற்றும் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் சார்பில் சென்னைகிண்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி 15 மாற்றுத் திறனாளிகளுக்கு பணிஆணைகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்