
ஈரோடு: தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘கருப்பன்’ யானை, விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளையும் சேதப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே இருவர் உயிரிழப்புக்கு காரணமான, ‘கருப்பன்’ யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. வனப்பகுதியைச் சுற்றியுள்ள தொட்டகாஜனூர், ஜீரஹள்ளி, திகினாரை, எரகனஹள்ளி, மரியாபுரம், கரளவாடி, மல்லன்குழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில், மக்காச்சோளம், சோளம், வாழை, தென்னை, பாக்கு போன்றவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்