
ராஜபாளையம்: நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06004) நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு தென்காசி வழியாக ராஜபாளையம் வந்து கொண்டிருந்தது.
இரவு 10.05 மணி அளவில் ராமலிங்காபுரம் ரயில்வே கேட்டை கடந்து நல்லமநாயக்கன்பட்டி அருகே வந்தபோது மின் கம்பி, ரயில் சக்கரத்தில் சிக்கி பயங்கர சத்தம் கேட்டது. லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். அதற்குள் மின் கம்பி ரயில் பெட்டியை சுற்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்