
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். கடந்த மாதம் பவானிசாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததாலும், பாசனத் துக்கு நீர் திறக்கப் பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்