
திருச்சி/ அரியலூர்: அரியலூர் அருகே போலீஸார் தாக்கியதால் விவசாயி உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக உண்மை கண்டறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மீது அண்மையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த அவரது மாமனார் ஜம்புலிங்கம்(60) என்பவரின் வீட்டுக்கு அரியலூர் போலீஸார் சென்று விசாரணை நடத்தியபோது, அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், டிச.8-ம் தேதி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்