
மேன்டூஸ் புயல் கரையைக் கடந்தநிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மரங்கள் முறிந்தன; பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதமடைந்தன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இந்த பாதிப்புகளை சீராக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்புதூரில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மேன்டூஸ் புயலால் மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் கடல் அலைகள் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டன. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சிமென்ட் சாலைகள் இடிந்து நொறுங்கின. மீன்பிடி வலைகளும் அடித்து செல்லப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்