
‘மேன்டூஸ்’ புயல் தாக்கியதால் காசிமேட்டில் 200-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. 3 விசைப் படகுகள் கடலில் மூழ்கின. சேதம் அடைந்த படகுகளை உடனடியாக கணக்கெடுப்பு செய்து நிவாரணத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகமாக இருப்பது காசிமேடு. இங்கு 1,300-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் படகுகளும், 850-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் உள்ளன. இங்கு தினமும் 1,000 டன் மீன் வரத்து மூலம் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்