Saturday, December 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/17/large/915732.jpg''ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே'' பாடலை பாட ஆசை - பள்ளி நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சேத்துப்பட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'முன்னாள் மாணவர்கள் சங்கக் கூடுகை - 2022' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்தப் பள்ளி முதல்வர் ஸ்டாலின் படித்த பள்ளி என்பதால் விழாவில் பேசியபோது பழைய நினைவுகளை நியாபகப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இங்கே ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியரும், என்னுடைய தமிழ் ஆசிரியருமான ஜெயராமன், "உன்னை மாணவனாகப் பெற்றதில் நாம் பெருமை அடைகிறோம்" என்று சொன்னார். நீங்கள் மாணவனாக பெற்றதில் எப்படி பெருமை அடைந்தீர்களோ, உங்களிடத்திலே நான் தமிழ் பாடத்தை கற்க கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். தமிழைக் கற்றுக் கொள்ளக்கூடிய, தமிழைப் பயிலக் கூடிய வாய்ப்பை மட்டும் நீங்கள் தரவில்லை; சாதாரணமாக நீங்கள் சொல்லித் தரவில்லை. அடித்து, அடித்து சொல்லி கொடுத்தீர்கள். அதுதான் எனக்குப் பெருமை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...