
சென்னை: சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் ரூ.91.64 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக வளாகத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.
சென்னை பாரிமுனை ராஜாஜிசாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ‘வைகை’ எனும் புதிய அலுவலக வளாகம் கட்டப்படுகிறது. ரூ.91.64 கோடி செலவில் 2 அடித் தளங்கள், 9 தளங்களுடன் இக்கட்டிடத்தை வரும் 2024-ம்ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது ஏற்றுமதி - இறக்குமதியை நெறிப்படுத்துவது தொடர்பான அரசு அமைப்புகளின் அலுவலகங்கள் இந்த வளாகத்தில் அமைய உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்