
திருவள்ளூர்: நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திர மாநில அணைகளான பிச்சாட்டூர் மற்றும் கிருஷ்ணாபுரம் அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேன்டூஸ் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து, 5 நாட்கள் பெய்தமழை தற்போது ஓய்ந்தது. இந்த மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 9-ம் தேதி முதல், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்