
சென்னை: முறையாக கால்வாய்களை இணைத்து, குப்பைகளை அகற்றிய காரணத்தால், கனமழையிலும் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு உறுப்பினர் ஜனகராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தது. இந்த மழையால் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், வட சென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை மேட்டார் கொண்டு சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்