
புதுச்சேரி: புதுச்சேரி சொசியெத்தே புரோகிரெசீஸ்த் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றவர்களை பள்ளி சங்க தலைவர் வேதாந்தம் வரவேற்றார். நூற்றாண்டு சிறப்பு அறிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வாசித்தார். முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். மலரை முதல்வரிடமிருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘‘நூறாண்டு கண்ட சொசியெத்தே புரோகிரெசீஸ்த் பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவது அவசியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்