
சென்னை: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 41-வது அகில இந்திய காவல் துறைகுதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழக காவல் துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பிரதேச மாநிலம், டெக்கான்பூரில் உள்ள பிஎஸ்எப் அகாடமியில் கடந்த நவ.14 முதல் 26-ம் தேதி வரை 41-வது அகிலஇந்திய காவல் துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல் துறைக்கான போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப் படை மற்றும் மாநில காவல் துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்