
கோவை: அன்னூர் அருகே தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது எனவும், மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும் எனவும் எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.
கோவை அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக, அன்னூரை அடுத்த குழியூரில் எம்.பி. ஆ.ராசா தலைமையில் போராட்டக் குழு பிரதிநிதிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின், விவசாயிகள் மத்தியில் ஆ.ராசா பேசியதாவது: விவசாயிகள் விருப்பம் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் 1,600 ஏக்கர் ஒரே சதுரமாக இருக்க வாய்ப்பில்லை என என்னிடம் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்