
உடுமலை: உடுமலை சுற்று வட்டாரத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவை இல்லை. அதனால் பேருந்துகளை நம்பியே பயணிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பக்தர்களின் வசதிக்காக, கடந்த 13-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை கோவை - திண்டுக்கல் இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முன் வந்தது. அதன்படி, காலை 11 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில், பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சந்திப்பை அடைகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்