
பொள்ளாச்சி: திண்டுக்கல் - பழநி வழித்தடத்தில் செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லா பயணிகள் ரயில்களின் நேரம் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை - பாலக்காடு விரைவு ரயில் காலை நேரங்களில் 7.23 மணிக்கு உடுமலை ரயில் நிலையம் வந்து, 7.25 மணிக்கு புறப்படும். காலை 7.52 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்து, 7.55 மணிக்கு புறப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்