
சென்னை: ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பதுக்கல் வழக்கு தொடர்பாக, சசிகலா உறவினரான தொழிலதிபர் பாஸ்கரை மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு போலீஸார் சென்னையில் நேற்று கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற `கட்டை' பாஸ்கர். இவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசியின் மகன் விவேக்கின் மாமனார். தொழிலதிபரான இவர் சென்னையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்