Tuesday, January 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/04/large/924431.jpg'ராகுல் காந்தியின் யாத்திரை எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது' - நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் உள்ள தனியார் மாஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுச்சேரி பொறுப்பாளரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான அனுமந்தராவ் பங்கேற்று பேசியதாவது: ‘‘தேசத்தை மத ரீதியாக பாஜகவும், பிரதமர் நரேந்தி மோடியும் பிளவுபடுத்தியுள்ளனர். ஆகவே தேசத்தை ஒன்றிணைக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவரது யாத்திரையில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். ராகுல்காந்தி வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் தன்னை காந்தியைப் போல வருத்திக்கொண்டு யாத்திரை சென்று தேசத்தில் ஒற்றுமையை ஏற்படுத்திவருகிறார். அவரது தியாகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸார் அனைவரும் மக்களைச் சந்திப்பது அவசியம். கிராமத்தில் மக்களைச் சந்தித்து காங்கிரஸின் கொள்கைகளை எடுத்துரைக்க வேண்டும்.’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...