
ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் பொதுமக்களுக்கு தையல் மெஷின்கள், பொங்கல் பொருட்களை வழங்கினார்.
பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது, ‘துரோகத்தால் தலைவர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்ப்பட்டு ஆட்சி நடத்த வேண்டும் என கூறியவர் கேப்டன். லஞ்சம், ஊழல் செய்து, தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடை திறந்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு மக்களும், கடவுளும் பாடம் புகட்ட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்