
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால், பாஜகவில் இருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலை தலைமையில் உள்ள பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் காவலர்களுக்கு தொல்லை கொடுத்ததாக புகார் வந்தவுடனே, இரு திமுகவினர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப் பாராட்ட மனமில்லாத அண்ணாமலை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்