
சென்னை: கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜன.21-ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப் பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடலூர் மாவட்டம், சித்தூரில் இயங்கி வந்த ஆரூரான் சர்க்கரை ஆலையும், கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படவில்லை. மேலும், கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.112 கோடி கரும்பு பண பாக்கியைத் தராமல், தேசிய கடன் தீர்ப்பாயத்துக்கு ஆரூரான் சர்க்கரை ஆலை சென்றுவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்