
ஆண்டிபட்டி: சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவாரம்பூ ஆண்டிபட்டி பகுதிகளில் அதிகளவில் பூத்துள்ளன. சர்க்கரை நோய் மருந்து தயாரிப்பதற்காக பலரும் இவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் கடந்த மாதம் தொடர் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து எம்.சுப்புலாபுரம், ஆசாரிபட்டி, அம்மச்சியாபுரம், பிராதுகாரன்பட்டி, க.விலக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மூலிகைச்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. குறிப்பாக ஆவாரம் பூவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்தப் பூ சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்த அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இப்பகுதி கூலித் தொழிலாளர்கள் பலரும் இதனை சேகரித்து மருந்தகத்திற்கு விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்