
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் செய்ததன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியை அதிமுகவும் பாஜகவும் தடுத்தன என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தனது வாழ்க்கை பயணம் குறித்து எழுதிய 'பாதை மாறா பயணம்' நூல் வெளியீட்டு விழா, சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்வில், நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முதல்பாகத்தை தி.க. தலைவர் கி.வீரமணியும், இரண்டாவது பாகத்தை கவிஞர் வைரமுத்துவும் பெற்றுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்