
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடல், 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம் (78). தேசிய விருதை 3 முறை பெற்றவர். பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசால் சமீபத்தில் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்