
கோவை: ‘புருசெல்லா' நோய் பாதிப்பை தவிர்க்க பசு, எருமை கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு ஒரு பிரதான தொழிலாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. கால்நடைகளில் பல்வேறு நோய் தாக்கம் ஏற்பட்டு பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்