
சென்னை: `இந்து தமிழ் திசை'யின் ஆனந்தஜோதி வழங்கும் ‘வாழ்வை வளமாக்கும் திருவிளக்கு பூஜை’பல்வேறு கோயில்களில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கடந்த 31-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியத்தில் உள்ள ஸ்ரீஹயக்ரீவர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகள் பழமைமிக்க இக்கோயிலில் மூலவர் ஸ்ரீதேவநாத சுவாமி. ஆனால், கல்விக்கு அதிபதியாகத் திகழும் ஸ்ரீஹயக்ரீவர்தான் இங்கே விசேஷமான தெய்வமாக போற்றப்படுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்