
சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே மேம்பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 2010-ல் ரூ.1,815 கோடியில் திட்டமிடப்பட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதல்வரான நிலையில், கூவம் ஆற்றில் பாலத்துக்கான தூண்கள் அமைப்பதால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறி அத் திட்டம் கடந்த 2012-ல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தை மீண்டும் தொடங்க 2015-ம் ஆண்டு மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்