
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி வண்டிப்பேட்டை குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கனகாம்பாள் (80). இவருடைய மகள் சாந்தி (60). சாந்தியின் கணவர் மோகன சுந்தரம் (65), மகன் சரவணக்குமார் (34) ஆகியோர் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை குமணன் வீதி பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கோபி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கனகாம்பாள், மோகன சுந்தரம் ஆகியோர் இறந்து கிடந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்