
மதுரை: காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால், 20 பூக்கள் கொண்ட ஒரு பஞ்ச் மலர்கள் ரூ.450க்கு விற்பனையாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் பிப்., 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதல் ஜோடிகள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், புதிதாக காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களும் ரோஜா பூக்களை வாங்கி தாங்கள் நேசிப்பவர்களுக்கு வழங்குவார்கள். மேலும், காதலர் தினத்தில் முக்கிய ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். இந்த நிகழ்ச்சிகளில் ரோஜா பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்