
சென்னை: தமிழக அரசின் தொழில் துறை மற்றும் இந்திய மின்னணுவியல் சங்கம் (எல்சினா) சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 13, 14-ம்தேதிகளில் ‘சோர்ஸ் இந்தியா’ என்ற கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பாதிப்புகளைக் கடந்து, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தைவான், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்