
சென்னை: எல்ஐசி மற்றும் பொதுத் துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில், சென்னை எல்ஐசி மண்டல அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காங். எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமார், பொதுச் செயலாளர் சித்தரஞ்சன் ஆகியோர் பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் விற்கப்பட்டும், சூறையாடப்பட்டும் வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்