
சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை ஆறுகள் சீரமைப்புஅறக்கட்டளை நிதியின் கீழ் அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளின் கரைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை சமன்படுத்துதல், திடக்கழிவுகளை அகற்றுதல், மரக்கன்றுகளை நடுதல் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க. நகர் பாலம் முதல் MRTS பாலம் வரை ரூ.5.4 கோடியில் நடைபாதை அமைத்தல், 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் போன்றபணிகள் நடைபெற்றன. முடிவுற்ற இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கடந்த நவம்பரில் திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்