
மதுரை/கோவை: மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிப்.18-ம் தேதி மதுரை வருகிறார். தொடர்ந்து கோவை ஈஷாவில் நடைபெறும் மஹா சிவராத்திரி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.
மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்