
சென்னை: தமிழக மின்வாரிய செயலர் ஏ.மணிக்கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு தணிக்கைப் பிரிவினரின் ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் கொள்முதல் செய்யும் பொருட்கள், உபகரணங்கள், நிலக்கரி போன்றவற்றின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில், தரம் உத்தரவாதப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.
கொள்முதல் செய்யப்படும் நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்து,அது தொடர்பான அறிக்கையைஉற்பத்திப் பிரிவு இயக்குநரிடம்,தரம் உத்தரவாதப் பிரிவு தலைவர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்