
சென்னை: அமெரிக்காவில் பலருக்கும் பார்வை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள குளோபல் பார்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், விசாரணை முடியும் வரை கண் தொடர்பான மருந்துகளை உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருப்போரூரில் செயல்பட்டு வருகிறது குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த சில கண் மருந்துகளால் அமெரிக்கர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படுவதாக, அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியது. மேலும், ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறப் படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்