
மதுரை/கோவை: இரு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் கோவை செல்லும் அவர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்.
புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (பிப்.18) காலை 11.40 மணிக்கு திரவுபதி முர்மு வருகிறார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்