
திருநெல்வேலி: டெல்லி ஐஐடி இயந்திர பொறியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தவர் கிரண் சேத்(73). இந்திய பாரம்பரியத்தையும், தன்னார்வ உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் கடந்த1977-ம் ஆண்டில், ஸ்பிக்மேகே என்ற அமைப்பை இவர் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த அமைப்பின்மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 800 இடங்களில் கருத்தரங்குகள், பாரம்பரிய கலைநிகழ்வுகள், இசை விழாக்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தியுள்ளார். இது ஒரு மக்கள் இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்